கலித்தொகை - முல்லைக் கலி 107
ADVERTISEMENTS
எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ;
தொழுவத்து,
5
ADVERTISEMENTS
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்;
அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது
10
ADVERTISEMENTS
கெட்டனள், என்பவோ, யாய்;
இஃதொன்று கூறு;
கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது;
'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
15
கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று;
எல்லாத் தவறும் அறும்;
ஓஒ! அஃது அறுமாறு;
'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின்,
20
நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'
அன்னையோ,
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ
25
நீ உற்ற நோய்க்கு மருந்து;
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்;
வருந்தாதி;
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்
30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.