கலித்தொகை - மருதக் கலி 88
ADVERTISEMENTS
ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்;
கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று;
5
ADVERTISEMENTS
வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம், மருள்வாரகத்து;
ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ, தவறு;
இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல்,
10
ADVERTISEMENTS
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறாதல் சாலாவோ? கூறு;
'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை
15
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
இனித் தேற்றேம் யாம்,
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி
20
யார் மேல்? விளியுமோ? கூறு.